தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் மிக முக்கியம் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது முதல் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே 11) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 20,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கலந்து கொண்டார் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
அமைச்சரான பிறகு முதன்முறையாக பேசிய டி.ஆர்.பி.ராஜா, “2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலட்சிய இலக்கு விரைவில் நிறைவேறும்” என்று கூறினார்.
அதுபோன்று அமைச்சரான பிறகு முதல்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம்.
டெல்டாவின் பாதுகாவலனாக இருப்பேன் என முதலமைச்சர் ஆணித்தரமாக நம்புகிறார். டெல்டா சார்ந்த தொழில்கள் அமைய வேண்டும் என்ற முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு நிச்சயமாக நிறைவேறும் வகையில் பணியாற்றுவேன்.
இந்திய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக, அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சருடனான வெளிநாட்டு பயணத்திற்கு நானும் செல்கிறேன்.
தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும் பணி சுமைக்கு இடையிலேயும் முதலமைச்சரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம். ஆனால் கிரவுண்டில் இறங்கி விளையாடும் போது யோசித்து விளையாட வேண்டும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவது தான் மிகமுக்கியம். அதற்காகவே மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சிகளை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப படிக்கும் போதே கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
பிரியா
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்: யார் யாருக்கு என்ன இலாகா?
அமைச்சர்களின் துறையை மாற்றியது ஏன்? : முதல்வர் விளக்கம்!