fஜியோவுடன் போட்டி : பி.எஸ்.என்.எல் சலுகை!

public

தினசரி 1 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குக்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 429 ரூபாய்க்கு சிறப்புத் திட்டம் ஒன்றை தங்களது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த ரூ.429 திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது இத்திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 429 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 90 நாட்களுக்கு 90 ஜி.பி. இலவச டேட்டாவைப் பெறலாம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது ஏர்டெல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.5 முதல் ரூ.399 வரையிலான சலுகைத் திட்டங்களைத் தங்களது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோவால் இச்சந்தை ஆட்டம் கண்டுள்ளது. துவக்கத்தில் அனைத்துச் சேவைகளும் இலவசம் என்று அறிவித்து வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கத் தொடங்கியது. தற்போது தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினாலும், அது பிற நிறுவனங்களை விட மிகமிகக் குறைவானதாகவே இருக்கிறது. அதனுடனான தங்களது போட்டியை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவுமே இவ்வாறு ஏர்டெல், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து வருகின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *