அசாம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விலைவாசி உயர்வுக்கு எதிராக பிரதமர் ஒன்றும் செய்யவில்லை. பீஹாரில் முப்பது பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்றிருந்தாலும், மக்கள் அவருக்குத் தோல்வியை அளித்தனர். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்துவருகிறது. ஆனால், இங்கு மக்களின் பணம் அரசு கஜானாவைச் சேருகிறது. அசாமில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், 2 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.
�,
+1
+1
+1
+1
+1
+1
+1