minister ponmudi house and office raid finished

சென்னை சைதாப்பேட்டை பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!

அரசியல்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்துள்ளது.

சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இரவு 10.45 மணியளவில் விழுப்புரத்தில் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய நிலப்பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் மட்டும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது.

செல்வம்

விழுப்புரம் பொன்முடி இல்லத்தில் ED சோதனை நிறைவு!

பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *