~இனி டாஸ்மாக்கில் பார் குறித்து புதிய நிபந்தனை!

public

டாஸ்மாக் விற்பனைக்காக, அதனுள் அமைக்கப்பட்டுள்ள பார்களின் ஒப்பந்தப்புள்ளியில் புதிய மாற்றம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, டாஸ்மாக் பார்களுக்கு மட்டும், விற்பனையைவிட அதிக விலை கொண்டு ஒப்பந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை நேற்று (ஜூன் 8) விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் அளித்த தீர்ப்பில், “கடந்த 2015ஆம் ஆண்டு, அக்டோபர் 27இல் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடையின் வருமானத்தைப் பொறுத்து, பார்களின் ஒப்பந்த விலையை நிர்ணயிக்க வேண்டும். அதை மீறும்வகையில் நடப்பில் இருக்கும் அனைத்து புதிய ஒப்பந்த விலை அறிவிப்புகளும் ரத்து செய்யப்படும். இதுதொடர்பாக, புதிய ஒப்பந்த விலையை நிர்ணயித்து வரும் நான்கு வாரங்களுக்குள் ஒப்பந்த விலை நிலவரங்களைத் தர வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *