மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, திமுக தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 23) நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன்,பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ் குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா, எழிலன் நாகநாதன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக பல்வேறு தரப்பினரிடமும் நேரில் சென்று கருத்துக் கேட்க முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் கல்வியாளர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை இக்குழு கேட்டறியவுள்ளது. அதன்பிறகு சென்னை வந்து கூட்டம் நடத்தி தேர்தல் அறிக்கையை முடிவு செய்வதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்குப் பயணம் செய்கிறோம் என்ற பட்டியலை இன்று முடிவு செய்திருக்கிறோம்.
இந்த பட்டியலை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகு அந்த ஊர்களுக்குப் பயணம் செய்யவுள்ளோம். எந்தெந்த விஷயங்களைக் கருத்தில் எடுத்துக்கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கப் போகிறோம் என்பதெல்லாம் அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.
தேர்தல் அறிக்கைக்காகக் கருத்துக் கேட்க இமெயில் ஐடி, செல்போன் எண்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் அறிக்கை என்பது கதாநாயகியாகக் கூட இருக்கலாம்” எனக் கூறினார்.
முன்னதாக இக்குழு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் அயலான் 2
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளை பிடிக்க தனிப்படை அமைப்பு!
நீட் ஒளிச்சிடுங்க
சனாதனம் ஒளிச்சிடுங்க
அதிமுக ஊழல் வழக்கு ஒளிச்சிடுங்க
பழய ஓய்வூதியம் ஒளிச்சிடுங்க
டாஸ்மார்க்ல 20 ஓவா அதிகம் வாங்கி மதுவ ஒளிச்சிடுங்க….
எம்.பி தேர்தலுக்கு ஒளிக்க போறத பார்த்திடுவோம்..
போங்கடா போக்கெத்தவன்களா