uஅது போன வாரம், இது இந்த வாரம்: அப்டேட் குமாரு

entertainment

வேலை முடிச்சு வீட்டுக்குப் போனா, பக்கத்து வீட்டு குட்டி பையன், ‘அங்கிள், உங்க கிட்ட ஒரு சீக்ரெட் சொல்லணும். பக்கத்தில வாங்க’னு கூப்பிட்டான். அவன் சேட்டையோட ஹிஸ்ட்ரி எல்லாம் தெரிஞ்சதால ஒரு பீதியிலயே தான் பக்கத்தில போனேன். என்ன தம்பின்னு கேட்டா, ‘அண்ணா, எங்க அப்பாவ ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகணும் வர்றீங்களா’ன்னு கேக்குறான். என்னவோ ஏதோன்னு பயந்து போய் விசாரிச்சா, ‘அங்கிள், என் அப்பா நேத்து சாயங்காலம் ரொம்ப நாளைக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாம் எனக்கு லீவுனு சொன்னாரு. காலையில ஸ்கூலுக்கு போகணும் கிளம்புன்னு சொல்றாரு. ஈவினிங் திரும்பவும் இனிமே ஸ்கூல் லீவுன்னு சொல்றாரு. அப்பா ஏதோ கம்பியூஷன்ல இருக்காரு அங்கிள். அதான் ரெண்டு பேருமா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோமா’னு கேக்குறான். இவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள அவன் அப்பாவே வெளிய வந்திட்டாரு. ‘பாத்தியா குமாரு, எப்பிடி பேச வச்சிட்டாங்க. எல்.கே.ஜி பசங்களுக்கு, ஓட்டு இல்லங்கிற காரணத்துக்காகவே விளையாடுறாங்களோ? ஒரு வழியா பசங்களுக்கு லீவு கொடுத்திட்டாங்க. பசங்கள கவனிக்க எங்களுக்கும் லீவு வேணும்னு கேட்டா ஆஃபீஸ்ல மொறச்சு பாக்குறாங்க. நாங்க என்ன பண்றது’னு சொல்லிட்டே சோகமா போறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் நல்லா கை கழுவி, வைரஸ எல்லாம் விரட்டிட்டு வர்றேன்.

**நாகராஜ சோழன் MA. MLA**

கல்யாணத்துக்கு பொண்ணு மட்டுமல்ல மண்டபம் கூட தேதிக்கு கிடைப்பது கஷ்டம் தான்.

**மயக்குநன்**

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு ‘தாரைவார்க்கும்’ எண்ணம் எதுவும் இல்லை!- அமைச்சர் கே.பி.அன்பழகன்.

அதான்… அண்ணா திமுக எனும் ‘தேரை’ இயக்கும் உரிமையையே விட்டுக் கொடுத்திருக்கீங்களே ..?!

**ஜால்ரா

காக்கா**

எங்க இருக்கீங்கன்னு வீட்டம்மா போன்ல கேட்டதுக்கு உன் ஹார்ட்ல இருக்கேன்னு சொன்னா…

இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சுட்டீங்கலான்னு கத்திட்டு போன்னை வச்சுட்டா

**மாஸ்டர் பீஸ்**

பொசசிவ்னெஸ் அழகு,

அடிமைத்தனமில்லா பொசசிவ்னெஸ் பேரழகு!

**உள்ளூராட்டக்காரன்**

அதென்ன எல்லாம் மார்ச் 31 வரை…?

இந்த பைனான்ஸியல் இயரோட கொரோனா போயிடுவேன்னு சொல்லிடுச்சா?

**மயக்குநன்**

தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்!- மோடி.

உங்க மனசாட்சிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்களா ஜீ..?!

**நாகராஜ சோழன் MA. MLA**

மது பாட்டில்களில் ‘ மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் ‘ என்ற வாசகம் இடம்பெறும்.- அமைச்சர் தங்கமணி

என்ன வேணாலும் எழுதுங்க, எவனும் படிக்க போறதில்லை, “கப்புனு” அடிக்க தான் போறாங்க!

**ச ப் பா ணி**

” நீங்கள் மன அழுத்தத்திலிருந்தால்,

இறந்த காலத்திலிருக்கிறீர்கள். நீங்கள் கவலையிலிருந்தால் எதிர்காலத்தில் இருக்குறீர்கள். நீங்கள் மன அமைதியில் இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்…”

-லாவோட்சு

**கவிஞர் மீரா**

போலிகளை நம்புகிறாய் போ! போ!

சரி, போ! போ! எக்கேடுங் கெட்டுப் போ! போ!

சமுதாய மே! அடுப்பில் மூட்டத் தக்க

எரிவிறகு தருமரமாய்ப் பட்டுப் போ! போ!

எனக்கென்ன எக்கேடுங் கெட்டுப் போ! போ!

நரிஊளைச் சத்தத்தைக் கேட்டு விட்டு

‘நாதசுரம்! யாழோசை’ என்றே உண்மை

புரியாமல் பிதற்றிக் கொண்டி ருக்கும் உன்றன்

போக்கையா ரல்மாற்ற முடியும்? போ! போ!

குடிலர்கள் கூடாரம் ஆய்விட் டாய் நீ!

கோட்சேக்கள் குகையாக மாறி விட்டாய்!

படிக்காத பேதைகளின் விமர்ச னத்தைப்

‘பார்அடடா!’ என்றியம்பத் தொடங்கி விட்டாய்!

தடியெடுத்த கயவர்க்குத் தாளம் போடும்

சமுதாய மே!உன்மேல் பற்றிக் கொண்ட

கொடியபிணி கொல்லவந்த மருந்து வர்தம்

குரல்வளையைப் பிடிப்பதற்கும் துணிந்து விட்டாய்!

தறிபார்த்து நெய்ததுணி போன்ற மென்மைத்

தத்துவத்தைத் தணல்மேலே வீசு கின்றாய்;

வெறிபோர்த்த சதைத்திமிரைக் காட்டு கின்றாய்;

வீரத்தைத் தியாகத்தைச் சத்தி யத்தைக்

குறிபார்த்துச் சுடுகின்றாய்; சமத்து வத்தைக்

குழிதோண்டிப் பிதைக்கின்றாய்! முள்ளில் லாத

‘நெறிபார்த்து வா’ என்னும் நல்லோ ரைநீ

நெஞ்சினிலே மிதிக்கின்றாய்; இதுவா நீதி?

வேடமிட்டுத் தழைப்போரை, ஞானி போல

வெளிச்சமிட்டுப் பிழைப்போரைப், பொருள் உடம்பைக்

கூடமட்டும் கூடிப்பின் ஒழுக்கம் பற்றிக்

கூசாமல் உரைப்போரை, மதுவ ருந்தி

ஆடமட்டும் ஆடிப்பின் அருள்பா லிக்க

ஆண்டவனை அழைப்போரை எல்லாம் நன்றாய்ச்

சாடமட்டும் சாடாமல் தழுவு கின்றாய்;

சமுதாய மே! நீதி வழுவுகின்றாய்!

காட்டுப்பூ மணம் வீசும் என்றால், இல்லை

காகிதப்பூ மணம் வீசும் என்பாய்; வீட்டு

மாடுப் பால் சுவைகொடுக்கும் என்றால், கள்ளி

மரத்தின் பால் சுவைகொடுக்கும் என்பாய்; நல்ல

மேட்டுநில மயில்நடனம் நன்றென் றால் நீ

மிகநன்று வான்கோழி நடனம் என்பாய்;

ஏட்டுக்காய் கறிக்குதவும் என்று வீணாய்

எண்ணுகின்றாய்; போலிகளை நம்பு கின்றாய்!……

……நாதியற்ற பிணமாக விரும்பும் உன்னை

நான்தடுக்க வாமுடியும்? நாச மாய்ப் போ!

**amudu**

சரத் பவாரின் சொத்து மதிப்பு 6 ஆண்டுகளில் ₹60 இலட்சம் அதிகரிப்பு.

இது நம்ம ஊர் கவுன்சிலர்கள் சொத்து வளர்ச்சியை விட ரொம்ப குறைவா இருக்கே.!?

**இதயவன்**

ரஜினிகாந்தைப் பற்றி பேச ரூ.5 லட்சம் அக்கவுண்டில் போடுங்கள் – சரத்குமார்

ரஜினிக்கே இப்படினா மோடியை பத்தி வாயை தொறக்க சொத்த எழுதி கேட்பார் போல சின்ராசு ?!!

**கோழியின் கிறுக்கல்!!**

பெட்ரோல் டீசல் விலையை குறைத்தால் மக்கள் அதிகமாக வெளியில் சென்று கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற தாயுள்ளத்தோடு பெட்ரோல் டீசலுக்கான வரியை ஏற்றியிருக்கிறது போலும் மத்திய அரசு!!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *