ஏம்பா எங்களோட ‘ரெக்கார்டுக்கு’ எந்த பிரச்சினையும் இல்லையே… களம் 8-ல் மீம்ஸ் போட்டு ‘தாளிக்கும்’ ரசிகர்கள்!

டிரெண்டிங்

ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லடித்த உலகக்கோப்பை போட்டிகள் தற்போது டயமண்ட் போல ஜொலிக்க ஆரம்பித்துள்ளன. தான் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு துண்டு போட்டு இடம் பிடித்துள்ளது. குறிப்பாக தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் ராஜா பகவுத் போல முதல் இடத்தில் உள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் இந்த உலகக்கோப்பை நிச்சயம் இந்தியாவுக்கு தான் என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக ஆரூடம் கூறி வருகின்றனர். என்றாலும் தென் ஆப்பிரிக்கா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற மூன்று அணிகளும் திடீரென விஸ்வரூபம் எடுத்து இந்தியாவை ஏதேனும் ஒரு போட்டியில் வீழ்த்தி விடலாம் என்ற அச்சமும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

குறிப்பாக கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியுசிலாந்து அணியிடம் தோற்று இந்தியா உலகக்கோப்பை போட்டியை விட்டு வெளியேறிய சம்பவம் இன்னும் ஒரு பயங்கர கனவாகவே இந்தியர்களுக்கு இருக்கிறது.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளும் ‘பேய்க்கும் பேய்க்கும்’ சண்டை மோடில் தான் இருக்கப்போகிறது. என்றாலும் கூட முன்னெப்போதையும் விட பேட்டிங், பீல்டிங், பவுலிங் என மூன்றிலும் இந்தியா பலம் பொருந்திய அணியாக இருப்பதால் ‘பாத்துக்கலாம்’ மோடில் தான் ரோஹித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சுமார் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் இந்திய அணிக்கு ஆதரவாக மீம்ஸ் போட்டு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே நேரம் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் 49 ரன்களை வைத்து கிண்டலடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இலங்கை அணி 49 ரன்களுக்கு உள்ளாகவே சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்க்க நாங்க கொஞ்சம் முன்னாலே போய்க்கிறோம் என இலங்கை அணி 55 ரன்களை எடுத்து விட்டது. 19.4 ஓவர்களில் சுருண்டாலும் கூட ஆர்சிபி அணியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்கோரை இலங்கை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.

உலகத்துல இருக்க எல்லா டீமும் முட்டி மோதினா கூட இந்த விஷயத்துல ஆர்சிபியோட சாதனையை யாரும் முறிக்க முடியாது போல!

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருமணமான 3 நாளில் காதல் ஜோடி கொலை: பெண்ணின் தந்தை கைது!

அண்ணாமலை நடைபயண வழக்கு: அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *