gஏர் இந்தியா: ஏசி இல்லாமல் பயணிகள் அவதி!

public

டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜூலை-2 ஆம் தேதி டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பக்தோக்ரா விமான நிலையத்தில் இருந்து நேற்று ஜூலை-2 ஆம் தேதி டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்கவில்லை. இதுகுறித்து பயணிகள் கேட்ட போது விமானம் புறப்பட்ட பின் ஏசி இயங்கத் தொடங்கிவிடும் என்று விமான ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் விமான புறப்பட்ட பிறகும் ஏசி இயங்கவில்லை. இதனால் காற்று இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். தாங்கள் வைத்திருந்த விசிறி, செய்தித் தாள்களை வைத்து காற்று வீசிக் கொண்டு சிரமத்தோடு பயணம் செய்துள்ளனர். பின் விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் கீழே இறங்குவோம் என்று கூறியுள்ளனர். மேலும், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் காற்று மற்றும் ஏசி இல்லாததால், ஆக்சிஜன் கேட்டார். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லை என்று கூறியதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பிறகே பயணிகள் விமானத்தை விட்டு இறங்கிச் சென்றுள்ளனர்.

இதுபோன்று நேற்று ஜூலை-2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை டேக் ஆஃப் செய்வதற்கு முன்பே கண்டறிந்த பைலட்டுகள் விமானத்தை இயக்க மறுத்துவிட்டனர். இதனால் விமானம் ஓடுபாதையில் இருந்து விமான நிலையத்திற்குத் மீண்டும் திரும்பியது. பின் மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் மற்றுக் கடன் நெருக்கடியுடன் இயங்கி வருவதால் தனியாருக்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *