�
செய்தி பரிமாற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சமூகவலைதளங்கள் வதந்திகளை பரப்புவதிலும் முன்னணியில் நிற்கின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை கவுண்டமணி இறந்துவிட்டார் என்ற வதந்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. பிறகு, அவர் தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறையில் புகார் அளிப்பார். கடந்த வாரமும் இதே நிகழ்வு நடந்தேறியது. வழக்கம் போல் காவல்துறையில் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இப்பிரச்னை தற்காலிகமாக ஓய்ந்தது. தற்போது இந்த வதந்தி பரப்புவோர் சங்கங்கள் நடிகை குஷ்பூவை குறிவைத்துக் களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக இருக்கும் குஷ்பூ அந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணையவுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டது.
இதை மறுத்து குஷ்பூ நேற்று (ஜூன் 27) தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் **நான் வேறு கட்சிக்கு மாற இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் அரசியலைவிட்டு விலகினாலும் காங்கிரஸை விட்டு செல்ல மாட்டேன். காங்கிரஸே எனது இலக்கு” என்று தெரிவித்துள்ளார். சமூகவலைதளங்களில் பிஸியாக இயங்கி வரும் குஷ்பூவுக்கே இந்த நிலைமையா என இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.�,”