~இட்லி, உப்புமா கெடாமல் தடுக்கத் தொழில்நுட்பம்!

public

இட்லி, உப்புமா போன்ற வேக வைத்த உணவுகளை மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கெடாமல் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பத்தை மும்பை பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார் டாக்டர் வைஷாலி பாம்போலே. இவர் இட்லி, உப்புமா போன்றவை கெடாமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இது குறித்து வைஷாலி பாம்போலே கூறுகையில், “இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுப் பொருட்களை எந்தவிதக் கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் 3 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பதற்கான பீம் ரேடியேசன் என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன். இதன்மூலம் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்க முடியும். 2013ஆம் ஆண்டு முதல் பல உணவுப் பொருட்களைச் சோதனை செய்து வந்தோம். இந்த ஆய்வுக்காக குறைந்த அளவிலான எண்ணெய் மற்றும் புரோட்டீன் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டோம். ஆனால், இட்லி, உப்புமா, டோக்ளா போன்ற வேக வைத்த உணவுகளில் மட்டுமே சிறந்த முடிவு கிடைத்தது. சமைத்த உணவில் முதன்முறையாக எலக்ட்ரான் பீம் கதிர்வீச்சைப் பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளோம்.

இந்த தொழில்நுட்பம் இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் அளிக்கப்படும் பேக்கேஜிங் உணவுகளுக்கும், விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் பலன் தரும்” என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *