�
அதிதி ராவ் ‘காற்று வெளியிடை’ படத்துக்கு முன்னரே, தமிழ்ப் படமான ‘சிருங்காரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியில் நடிக்கும் முன்னரே அதிதி தமிழ்ப் படத்தில் நடித்துத்தான் தனது கேரியரை ஆரம்பித்தார். இந்திப் படங்களில் தனக்கென இடத்தைப் பிடித்திருந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிப்பதை பெரிதும் விரும்புகிறாராம் அதிதி.
காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு தமிழிலும் அதிக வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த அதிதி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி நடித்த காற்று வெளியிடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. மிகப்பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தநிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. தமிழின் பிரபல இயக்குநர் மணிரத்னம் என்பதால் அவர் படத்தில் நடித்தால் தமிழிலும் அதிகமாக வாய்ப்புக் கிடைக்கும் என்று அதிதி எதிர்பார்த்திருந்த நிலையில், படம் சரியாகப் போகாததால் அதிதி பெரும் ஏமாற்றத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
கோலிவுட்டுக்கு என்று தனி மேனேஜர், சென்னையில் வீடு எடுத்திருந்த நடிகை தற்போது மும்பைக்கே திரும்பியுள்ளார். வாய்ப்பு ஏதும் வராததால் அதிதி கடும் அப்செட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அவரின் மனதைப் புரிந்துகொண்டு தமிழின் முன்னணி இயக்குநர்கள் மனது வைத்து தங்களது படங்களில் வாய்ப்பளித்தால் தமிழுக்கு திறமையான, அழகான நடிகையான அதிதி தமிழ்ப் படங்களில் நிலைப்பார்.�,