மோடி ஒரு பொய்யர், அவர் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு கூறிய தனது கருத்துக்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார் என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.
மும்பை எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய மேம்பாலத்தில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22பேர் பலியாகினர். இதுகுறித்து ராஜ் தாக்கரே இன்று(செப்டம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மோடி ஒரு பொய்யர். மும்பை புறநகர் பிரச்சினைகளை தீர்க்கும் வரை பிரதமரின் புல்லட் ரயில் திட்டத்தை நான் அனுமதிக்கமாட்டேன். புல்லட் ரயில் திட்டத்துக்கு ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க நான் அனுமதிக்க மாட்டேன்.
முதலில் மும்பையிலுள்ள அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படட்டும். மோடிக்கு புல்லட் ரயில் வேண்டும் என்றால் அவர் குஜராத்துக்குள்ளேயே தொடங்கட்டும்.பதவியைப் பிடிக்க மோடி தேர்தலுக்காக வாக்காளர்களிடம் பொய்களைக் கூறியுள்ளார். ஒரு நபர் எவ்வாறு இப்படி பொய் சொல்ல முடியும் அவர் 2014ஆம் ஆண்டுக்குப் முன்பு கூறிய தனது கருத்துக்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு நன்மை செய்வேன் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த அவர் தற்போது அவற்றை தள்ளுபடி செய்து விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.�,”