சாதியின் பெயரால் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவை, வாரம் இரண்டு நாட்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா நேற்று, கவுசல்யாவையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து வந்தார். நாளை மறுதினம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் சாமுவேல்ராஜ் மீண்டும் செல்கிறார். திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் சசிகலா தலைமையில், ஒரு பெண்கள் குழு வாரம் இருமுறை கவுசல்யாவைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராதிகா, கவுசல்யாவை தன் வீட்டில் வந்து இருந்து சிலகாலம் தங்கி, உடம்பைக் கவனித்துக்கொண்டு செல்ல அழைத்துள்ளார். கழிப்பறை வசதிகூட இல்லாத வீட்டில், காவல்துறையின் பாதுகாப்புடன் காதல் மணம்புரிந்த சங்கரின் நினைவுகளுடன் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் கவுசல்யாவை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தேற்றி, அவரைப் படிக்கவைத்துப் புது வாழ்வுக்கு அழைத்துவர மாதர் சங்கத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
�,