hசிபிஎஸ்இ: செய்முறைத் தேர்வு அறிவிப்பு!

public

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆனால், பொதுத் தேர்வுகளுக்கான அதிகாரபூர்வமான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்வு தேதிகள் டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனக் கடந்த 8ஆம் தேதி பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, ஜனவரி 16 முதல் 25வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *