காதல் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் எதிர்பார்ப்பு உண்டு. அவ்வகையில் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் அதிகம் பாதித்தது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் ‘பிரேமம்’ படம். இப்படம் சென்னையில் 200 நாட்களைக் கடந்து ஓடி சாதனை புரிந்தது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த ஆனந்த் கே.சந்திரனின் காதல் கைகூடி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த் கே.சந்திரன், ஸ்வாதி பிரதாப் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஒரு பள்ளி விழாவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த இவர்கள் முதலில் நண்பர்களாகி பின்னர் காதலர்களாக மாறினர். இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்துக் கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆனந்த் கே.சந்திரன் – ஸ்வாதி திருமணம் கொச்சியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மலையாள திரையுலகமே திரண்டு வந்து இந்தக் காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.�,