Cஏர்டெல் மீது ஜியோ புகார்!

public

தவறான விளம்பரம் வெளியிட்டதாகக் கூறி ஏர்டெல் நிறுவனம் மீது இந்திய விளம்பர தரநிர்ணய ஆணையத்திடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் புதிதாக வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனம் ஏர்டெல் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் ஏர்டெல் நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையின் வேகத்தை கணக்கிட ookla” என்ற நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தியதாக தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த விளம்பரம் வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தருவதாகக் கூறி, ஜியோ நிறுவனம் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய தரநிர்ணய ஆணையத்திடம் ஜியோ அளித்துள்ள புகார் மனுவில், ’ஏர்டெல் நிறுவனம் தனது இன்டர்நெட் சேவையின் வேகத்தைக் கணக்கிட பயன்படுத்திய ookla நிறுவனம் ட்ராய் மற்றும் தொலைதொடர்பு துறையால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் ஆகும். எனவே, ஏர்டெல் நிறுவனம் தனது விளம்பரத்தில், ’அதிகாரபூர்வமாக’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது’ என்று ஜியோ தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நெட்வொர்க் சந்தையில் முன்னிலை வகிக்கும் ஏர்டெல் நிறுவனமும், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்துவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மோதிக்கொள்வது இது முதன்முறையல்ல. முன்னதாக, போதிய இன்டெர்கனெஷன் இணைப்புகள் வழங்குவதில்லை என்று ஏர்டெல் மீது ஜியோ புகாரளித்திருந்தது. இதை மறுத்த ஏர்டெல், ஜியோவுக்கு போதியளவிலான இணைப்புகளை வழங்கியுள்ளதாகக் கூறியது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *