சிவகங்கை மாவட்டம் மாரநாடு கால்வாய்களில் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் அம்மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் வைகையாற்றிலிருந்து மாரநாடு கண்மாய்க்கும், அங்கிருந்து 6 ஊருணிகளுக்கும் நீர் வரும் கால்வாய் வழித்தடங்களில் கருவேல மரம் வளர்ந்துள்ளதால் ஊருணிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்குள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று (நவம்பர் 30) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதி ஒத்திவைத்தது.
�,