பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசே எதிரியாகலாமா?

public

ஏர் இந்தியா உட்பட நஷ்டத்தில் இருக்கும் 28 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள அண்மையில், நிதி ஆயோக் பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலமான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. காரணம், நடப்பு நிதி ஆண்டில் பங்குவிலக்கல் மூலம் ரூ.56,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதுகுறித்து தொழிற்சங்க பொதுச்செயலாளர் தபென் சென் கூறுகையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்த நாட்டை விற்பது போன்றது. இந்த பரிந்துரையை பிரதமர் ஏற்கக்கூடாது. மாறாக, இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்றார். மேலும், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் செப்டம்பர் 2ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *