எங்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுகிறார்கள் : திருமாவளவன்

public

நடிகர் ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தான விவகாரத்தில் எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பிவிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்தநிலையில், அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் ரஜினியின் இலங்கைப் பயணம் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததையொட்டி ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் ரஜினியின் வருகை ரத்தானது குறித்து பெரும் அதிர்ச்சியடைந்தது. இதனால் ஏமாற்றமடைந்த லைக்கா நிறுவனம், தமிழக அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக ரஜினி பயணத்தை ரத்து செய்ய வைத்துவிட்டனர் என்று கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ரஜினியின் இலங்கைப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்கான காரணம் குறித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: ரஜினிகாந்த் இலங்கைப் பயணத்தை ரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஈழத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறினோம். விழாவில் சிங்கள எம்.பி.,க்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் ரஜினி பங்கேற்றால் தமிழர்களுக்கு எதிரானதாக அமையும். கிளிநொச்சி, வவுனியா, மட்டகளப்பில் இலங்கைத் தமிழர்கள் சம உரிமைக்காக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்தபிறகு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்களை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றது. தற்போது அவர்களைக் காணவில்லை. இதுபற்றி சிங்கள அரசு உரிய பதில் தரவில்லை. தமிழர்களுக்கு சரியாக உணவு, அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. அவர்கள் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இந்த விழாவில் நடிகர் ரஜினி கலந்துகொண்டால் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைமீதான போர்க்குற்ற விசாரணைக்கு தடையாக இருக்கும். அது விசாரணையை திசை திருப்பிவிடும்.

இலங்கை அதிபர் சிறிசேனா, கடந்தமுறை அதிபராக இருந்த ராஜபக்சேவைவிட அதிக கொடுமைகளை தமிழர்களுக்குச் செய்து வருகிறார். அங்குள்ள எம்.பி.,க்கள் சிறிசேனாவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார்கள். மேலும் எங்களுக்கு எதிராக இலங்கை அரசு மற்றும் அங்குள்ள சிறிய கட்சியினர் தமிழர்களிடம் நோட்டீஸ் கொடுக்கிறார்கள். சுவரொட்டியும் ஒட்டி வருகிறார்கள். எனவேதான், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *