கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே முதல்வராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நோய்த்தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் தமிழகத்தில், ‘ஒரு உயிரைக்கூட நாம் இழக்கக் கூடாது’ என்று பேசியிருக்கிறார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும், ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் 14 அமைச்சர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
**சென்னை மாவட்டம்**
மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
பி.கே.சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.
** செங்கல்பட்டு**
தா.மோ.அன்பரசன், ஊரகத்தொழில் துறை அமைச்சர்.
**கோயம்புத்தூர்**
அர.சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர்.
** திருவள்ளூர்**
சா.மு.நாசர், பால்வளத்துறை அமைச்சர்.
**மதுரை**
பி.மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,
பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்,
**தூத்துக்குடி**
கீதா ஜீவன், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.
**சேலம்**
வி.செந்தில் பாலாஜி. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.
**திருச்சி**
கே.என்.நேரு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.
அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
**திருநெல்வேலி**
இ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர்.
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்.
** ஈரோடு**
க. முத்துசாமி, வீட்டுவசதி துறை அமைச்சர்.
**காஞ்சிபுரம்**
எ.வ.வேலு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்
**திருப்பூர்**
மு.பெ.சாமிநாதன், செய்தித்துறை அமைச்சர்.
**வேலூர்**
துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்.
ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.
**விழுப்புரம் **
க.பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
**-பிரியா**
�,