Kஆளுநரைச் சந்தித்த முதல்வர்!

politics

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 9) மாலை சந்தித்துப் பேசினார்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் இரண்டாவது முறையாக இன்று ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து, இந்த சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வரை வரவேற்று ஆளுநர் புத்தகம் ஒன்றை வழங்கினார். சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்துக் கலந்தாலோசிக்க ஆளுநரை முதல்வர் சந்தித்தார். அப்போது ஆளுநர் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது நீர்வளத் தறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கடந்த மே 15ஆம் தேதி முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்தார். அப்போது ஆளுநர் ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *