குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவு பெற்றது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது.
அப்போது, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையின் இருக்கைகள் மீது ஏரியும், அவைத்தலைவர் இருக்கையை நோக்கி ஆவணங்களைத் தூக்கி எறிந்தும் அமளியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகின.
அதோடு எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற பாதுகாவலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதுகுறித்து எம்பிக்கள் கூறுகையில், பெண் எம்பிக்கள் மீதும் பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல் நடத்தினர் என்று குற்றம்சாட்டினர்.
எதிர்க்கட்சிகளின் அமளியைப் பொறுக்கமுடியாமல் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்கலங்கினார். அதோடு சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டோலா டென் ஆகியோர் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் கடும் அமளியில் ஈடுபட்டதாலும், அவை நடவடிக்கைகளைத் தடுத்ததாலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள், கடந்த கூட்டத்தொடரில் நடந்த அமளிக்காக நடப்பு கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
**-பிரியா**
�,