கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு அவரது கட்சிக்காரர் மனைவியே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இதுதொடர்பாக கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமென, அக்கட்சியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி விஜயகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏப்ரல் 18ஆம் தேதி பல்லடம் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் தனது கணவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், ஆனால் அவரது மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் கட்சிக்காரரையே கவனிக்காதவர், எங்கு மக்களைக் கவனிப்பார் என்றும் விமர்சித்திருந்தார்.
சென்னையில் நேற்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசுகையில் இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “என்னுடைய பிரச்சாரத்துக்கு தடை கேட்கும் மனுவை அவராகக் கொடுத்தாரா அல்லது பிற கட்சியினர் கொடுக்க வைத்தார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அந்த பெண்ணின் சார்பில் எங்கள் கட்சிக் காரர்களிடம் பிற கட்சிக்காரர்கள் வந்து காசு கேட்டிருக்கிறார்கள். அப்படி நாங்கள் பண உதவி செய்வதாக இருந்தால், அந்த குடும்பத்தினருக்கே நேரடியாக செய்வோம். இதில் இடைத் தரகர்கள் அதுவும் வேறு கட்சிக்காரர்கள் தலையிடுவது நியாயமில்லை. அதனால்தான் இதில் நாங்கள் அக்கறை காட்டவில்லை” என்று தெரிவித்தார்.
“இறந்த பாலமுருகனின் வீட்டில் மக்கள் நீதி மய்யத்தினர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இருந்தார்கள். இன்னமும் கூட அவர்கள் சென்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், ஆனால் தூண்டுதலின் பேரில்தான் அவர் இவ்வாறு மனு அளித்திருக்கிறார் எனவும் விளக்கினார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
[ டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?](https://minnambalam.com/k/2019/05/10/77)
.
[ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/10/74)
.
[அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/05/10/27)
.
[கோவைத் தென்றல் ஓய்ந்தது!](https://minnambalam.com/k/2019/05/10/51)
.
.
[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/05/09/26)
.�,”