yபிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

public

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரான்ஸ் தூதரகம் உள்ளது. பிரான்ஸ் அதிபரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கடந்த 2015ஆம் ஆண்டு முதலே பிரான்சில் அவசர நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதால் பிரான்ஸ் நாட்டில் சற்றே பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தலையொட்டி அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் பிரான்ஸ் தூதரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் டெலிபோனில் மர்ம நபரால் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு சந்தேகத்துக்குரிய வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர். மேலும், தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஓட்டு போட வந்த அனைத்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தற்போது பலத்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *