அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) இந்தியாவைச் சேர்ப்பதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார் இந்திய பிரதமர் மோடி. இதையொட்டி எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உஸ்பெஸ்கிஸ்தான், தாஷ்கண்ட் நகருக்கு இன்று புறப்பட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி. எஸ்.சி.ஓ அமைப்பில் ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீன குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷியக் குடியரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் ஆகியோர் இதில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக ‘அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்தவொரு நாட்டையும் என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராக சேர்க்கக்கூடாது என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடாகும்’ என இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து தெரிவித்திருந்தது. எனவே, இந்த சந்திப்பின்போது சீன குடியரசு தலைவரிடம், ‘அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி வலியுறுத்த உள்ளார் என்கின்றனர் பாஜக-வினர்.�,
wஎஸ்.சி.ஓ மாநாடு: தாஷ்கண்ட் புறப்பட்டார் மோடி!
+1
+1
+1
+1
+1
+1
+1