rஇடைத்தேர்தலை தள்ளிவைக்க இயலாது : இல.கணேசன்

public

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்தவோ, தள்ளிவைக்கவோ சாத்தியமில்லை என, பாஜக எம்.பி., இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த இல.கணேசன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தருண் விஜய் கூறிய கருத்துக்கு ஏற்கனவே அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிப்பாக தேர்தலை நிறுத்தவோ, தள்ளிவைக்கவோ வாய்ப்பில்லை. அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்த உரிமையுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *