விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட 2 பாரா மெடிக்கல் கல்லூரிகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் அன்னை தெராசா பாரா மெடிக்கல் கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளும் உரிய அரசு அனுமதியின்றிச் செயல்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் இரு கல்லூரிகளையும் பூட்டி சீல்வைத்தனர். தப்பியோடிய கல்லூரிகளின் நிர்வாகிகளை அதிகாரிகள் தேடிவருவதாகக் கூறினார்கள்.
�,