kஅரையிறுதி வாய்ப்பைப் பெறுமா இந்திய அணி?

public

உலக ஆக்கி லீக் தொடரின் காலிறுதி சுற்றுகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. 10 அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 8 அணிகள் மட்டும் காலிறுதி வாய்ப்பை பெற்றனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, மலேசிய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. மலேசிய அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்றைய போட்டி குறித்து இந்திய பயிற்சியாளர் ரோலன்ட் ஒல்ட்மான்ஸ் கூறுகையில் **இந்த போட்டியில் காலிறுதியில் இருந்து தான் சவால் தொடங்குகிறது. அதற்கு ஏற்ற வகையில் முன்னணி அணிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். எனவே திறமையாக விளையாடுவது அவசியம்.** எனத் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *