fஎலும்புகளை உறுதிப்படுத்தும் தக்காளி!

public

காய்கறிகளில் மிக எளிதாக வளரக்கூடியது தக்காளி. வீட்டுக் கொல்லையிலேயே வளர்க்கலாம். உடலுக்கு நன்மை பயக்கும் மூன்று வித புளிப்புகள் தக்காளியில் உள்ளன. செடியிலிருந்து பறித்த பின்னும் வெகு நேரம் வாடாமல் ருசியும் குறையாமல் இருக்கும் தக்காளி. உடலில் சேரும் கிருமிகளை கொன்று அது சுரக்கும் அமிலத்தை சக்தியற்றதாக ஆக்குவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கி சுறுசுறுப்பை உடலுக்கு தருகிறது. இதய நோய்களை வர விடாமல் தடுப்பதிலும் தக்காளியில் உள்ள என்சைம்கள் உதவுகின்றன. மக்னீசியம் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை நீக்குகிறது. இது தவிர உடலுக்கு நலம் பயக்கும் முக்கிய தாதுக்கள் பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு ஆகியவையும் தக்காளியில் உள்ளன. தக்காளியில் உள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்தும். நாவறட்சியை போக்கி, உமிழ்நீரையும் சுரக்க வைக்கிறது தக்காளி. தக்காளியை அப்படியே சாப்பிட்டால் மிகவும் நல்லது. போதுமான அளவு சமையல் செய்தும் சாப்பிடலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *