h
இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தாதார்களின் எண்ணிக்கை 118 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் வரையிலான இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தாதார் குறித்த விவரங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அக்டோபர் 24ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் தொலைத் தொடர்புச் சேவையில் புதிதாக 97.7 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதன்மூலம் நெட்வொர்க் சந்தாதார்களின் மொத்த எண்ணிக்கை 118.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் வயர்லெஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 116.6 கோடியாகவும், வயர்லைன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.21 கோடியாகவும் இருக்கிறது. மேலும், நகர்ப்புற சந்தாதார்களின் எண்ணிக்கை 66.68 கோடியாகவும், கிராமப்புற சந்தாதார்களின் எண்ணிக்கை 52.22 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.21 கோடி சந்தாதார்களைத் தனது சேவைக்குள் இணைத்து ஜியோ இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஜியோவின் சந்தைப் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 51 சதவிகிதமாகும். ஒட்டுமொத்தமாக, இச்சந்தையில் ஏர்டெல் முதலிடம் வகிக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 29.64 சதவிகிதமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 20.50 சதவிகித சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வோடஃபோன் (19.24%), ஐடியா (18.61%) ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இவ்விரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால், தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமாக ஏர்டெலைப் பின்னுக்குத் தள்ளி ஐடியா – வோடஃபோன் உள்ளது.�,