மெரினா கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

public

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற இரு சகோதரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் இன்று காலை மெரினா கடற்கரைக்கு குளிக்க வந்தனர். நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் ஒன்பது மாணவர்களும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இருவரும் அலையில் அடித்து செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்து பயமடைந்த மாணவர்கள் சத்தம் போட்டுள்ளனர். அங்கு ரோந்து பணியிலிருந்த போலீசார் மாணவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

இருவர் கடலில் மூழ்கியதை அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக, கடலில் இறங்கி இரு மாணவர்களையும் தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் இரு மாணவர்களின் உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்றும், இவர்கள் முறையே 10 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெரினாவில் கடல் அலையில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க நீர்காப்பு பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்படும். கடலோர காவல் படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும். இப்பிரிவில் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *