மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்து வருகிறதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு சந்தையில் மஞ்சளின் வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரவிசங்கர் என்னும் வணிகர் பேசுகையில், “வெள்ளிக்கிழமையன்று சந்தைக்கு 4,500 மூட்டைகளில் மஞ்சள் வந்து சேர்ந்தது. ஆனால் மஞ்சளின் விலை அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தில் மஞ்சளின் விலை அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக மஞ்சளின் விலை குறைந்து கொண்டே வருகிறது. உரிய விலை கிடைக்கவில்லை என்றாலும், பழைய மஞ்சள் மூட்டைகள் விவசாயிகளிடம் உள்ளது. தேவையில் இருக்கும் வணிகர்கள் ஓரளவுக்கு மஞ்சள் மூட்டைகளை வாங்கி வைத்துள்ளனர்.” என்று கூறினார்.
ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கத்தின் விற்பனை நிலையத்தில், விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு 5,500 ரூபாய் முதல் 8,789 ரூபாய் வரை விற்கப்பட்டது. வேர் மஞ்சள் குவிண்டாலுக்கு 5,111 ரூபாய் முதல் 7,829 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நிலையத்துக்கு வந்து சேர்ந்த 1,850 மூட்டைகளில் 1,097 மூட்டைகள் விற்பனையாகி விட்டது.�,