ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய உணவுப்பொருள், பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசியதாவது, நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்வது கவலை அளிப்பதாக உள்ளது. இதனைத் தடுக்க இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் அடுத்து பேசிய, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா, உலகின் பல நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்ததால் கலாச்சார பண்புகள் சீர்குலைந்துவிட்டன. நாட்டின் கலாச்சார பண்புகளைக் காப்பாற்றுவதற்கு இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1