வடிவேலு இரட்டை வேடங்களில் கதாநாயகனாக முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தை இயக்குநர் சங்கர் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் நாசர், ஸ்ரீமான், இளவரசு, மோனிக்கா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் இருந்தது.
இந்நிலையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2ஆம் பாகம்’ விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிம்புதேவன் இயக்கவுள்ள இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தொடக்கத்துக்கான பணிகள் நீண்ட நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜூலை 8, 2006ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று (ஜூலை-8) அப்படம் வெளியாகி 11 ஆண்டுகளாகிறது. அதை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர், “புலிகேசி படம் வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. 2ஆம் பாகம் விரைவில் தொடங்கப்படும்” என்று தனது [ட்விட்டர்](https://twitter.com/shankarshanmugh/status/883661896469012480) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சபேஷ் – முரளி இசையமைத்த அப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 2006ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
�,”