‘தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும்’ என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இரண்டு மேம்பாலங்களை திறந்து வைத்தார். [மதுரை]( https://minnambalam.com/k/2017/05/04/1493882635)யில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்துவரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்தப் புதிய மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி ரூ.22.25 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் மூலமாக பல்வேறு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள குவாரிகள் அனைத்தையும் இனிமேல் [அரசே]( https://www.minnambalam.com/k/2017/05/02/1493709699) முழுமையாக எடுத்து செயல்படுத்தும். ரோடு கான்ட்ராக்ட் அதாவது மணலை லாரியில் நிரப்புவது, அதைப்போல ஸ்டாக் யார்டு மணலை சேமித்து வைப்பது ஆகிய இரண்டையும் இனிமேல் அரசினுடைய மேற்பார்வையில் எடுத்து செயல்படுத்தப்படும். இதன்மூலம் மணல் விலை கட்டுப்படுத்தப்படும். அதைப்போல பொதுமக்களும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்கிறவர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் இனி தாங்கள் கட்டுகின்ற கட்டடங்களுக்கு மணலுக்கு பதிலாக எம் சேண்ட் பயன்படுத்த வேண்டும். கட்டுமானத் தொழில் ஈடுபட்டிருக்கிறவர்களும் படிப்படியாக எம் சேண்டுக்கு வர வேண்டும். இதனால் 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையாக மணல் நிறுத்தப்படும். நம்முடைய தமிழகத்திலே நிலத்தடி நீர் உயர்த்தப்பட வேண்டும்.
மேலும், மழையின் அளவும் குறைவாக உள்ளது. மணல் இருந்தால்தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இயங்கி வந்த மணல் குவாரிகள் அனைத்தையும் மூடச் சொல்லி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை [உத்தரவிட்டார்]( http://krypto.in/k/2017/04/29/1493404238) என்பது குறிப்பிடத்தக்கது.�,”