போப் ஃபிரான்சிஸை விமர்சிக்கும் சுவரொட்டிகள் ரோம் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கின்றன. பழமைவாத கிறிஸ்தவர்களை போப் தாக்குகிறார் எனும் படி, சுவரொட்டிகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.வெள்ளி கிழமைக்கும் சனிக்கிழமைக்கும் இடையில் இருந்த இரவில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதில், போப் முறைத்துக் கொண்டிருக்கும் படத்தின் கீழ், “எங்கே உங்களது கருணை?” என அச்சடிக்கப்பட்டுள்ளது.
மால்டாவிற்கு போப் ஆண்டவரின் தனிப்பட்ட பிரதிநிதியின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த போஸ்டர்கள் தோன்றியிருக்கின்றன. 2014 முதல்,மால்டாவின் மதகுருவாக இருந்த பழமைவாத பிரோகிதர் ரேமண்ட் லியோ புர்கே தேர்வு செய்யப்படவில்லை என்பதனால் இவ்வாறு போஸ்டர்கள் தோன்றியிருக்கலாம்.
சுவரொட்டிகளில் ரோம் உழைக்கும் வர்க்கத்தினரின் மொழி பயன்படுத்தப்பட்டிருப்பதனால், அவை மேலும் மர்மமானதாக கருதப்படுகிறது.
இந்த சுவரொட்டிகளுக்கு முறையான வரி செலுத்தப்படவில்லை என்பதனால், சுவரொட்டிகள் மீது “சட்ட முறைகேடான விளம்பரம்” எனும் வெள்ளை காகிதம் ஒட்டப்பட்டிருக்கிறது.இது குறித்து வாடிகன் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும், போப் ஆண்டவருக்கு நெருங்கிய நண்பரான ஃபாதர் ஆண்டோனியோ ஸ்பாரடோ, “ஃபிரான்சிஸ் நல்லது செய்கிறார்;அது பலருக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம்” என ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.�,