பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: தமிழக அரசுக்கு உத்தரவு!

public

பிற்படுத்தப்பட்ட சமூகமாக ஈழவா பிரிவினரை அறிவிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் தலைவர் மாதவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஈழவா இனம் மிக நீண்ட காலப் பாரம்பரியம் உள்ள சமூகம். ஈழவா மற்றும் தியா பிரிவினர் கேரள மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர்.

இந்தப் பிரிவினர் தமிழக அரசு சாதிகள் பட்டியலில் 28ஆவது இடத்திலும், மத்திய அரசு பட்டியலில் 37ஆவது இடத்திலும் பிற்படுத்தப்பட்டோராகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலும் ஈழவா பிரிவுக்குப் பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் இடங்களில் அதிகம் வசிக்கும் ஈழவா மற்றும் தியா இன மக்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் என்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், டெல்லியிலும் ஈழவா, தியா பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஈழவா, தியா மக்கள் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்கப்பட்டுச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, ஈழவா, தியா இன மக்களைப் பிற்படுத்தப்பட்டோராகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் சமூகத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வார காலத்திற்குத் தள்ளிவைத்தனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *