அப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து: ஓட்டுநர் நடத்துநர் உயிரிழந்த சோகம்!

தமிழகம்


பெரம்பலூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஓட்டுநர் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று (ஜூலை 30) காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து முன் பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான திருச்சியைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மங்களமேடு போலீசார் உயிரிழந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்களும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் க்ரேன் மூலம் லாரி மீது மோதியவாறு நின்றுகொண்டிருந்த பேருந்தை அகற்றினர். விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒரே மாதத்தில் தற்போது இரண்டாவது முறையாக அரசு பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டது போக்குவரத்துக் கழக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *