குளிர்சாதன பெட்டி வெடித்து மூவர் பலி!

தமிழகம்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரப்பாக்கம் கோதண்டராமன் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது நினைவு தினத்திற்காகத் துபாயிலிருந்து உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன் தினம் (நவம்பர் 2) சென்னை வந்தனர்.

ஒரு வருட காலமாகப் பூட்டி வைத்திருந்த வெங்கட்ராமன் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர்கள் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தியுள்ளனர்.

உறவினர்களான கிரிஜா (63) அவரது தங்கை ராதா (55), ராஜ்குமார் (48) ஆகிய மூவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று (நவம்பர் 4) காலை இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி மின்கசிவு காரணமாக திடீரென வெடித்தது.

குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் பயங்கர சத்தம் மற்றும் அறையிலிருந்து புகை வெளியேறியது.

குளிர்சாதனப் பெட்டி வெடித்த சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்த பார்க்கவி என்பவர் வேகவேகமாக வந்து மேற்குறிப்பிட்ட 3 பேரும் தங்கியிருந்த அறையைத் திறக்க முயன்றுள்ளார்.

ஆனால் கதவை திறக்க முடியாததால் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அறையில் தூங்கிக் கொண்டிருந்த மூவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்தது.

அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.

அதிகாலையில் நிகழ்ந்த எதிர்பாராத நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோனிஷா

ஆவின் பால் விலை எவ்வளவு உயர்ந்தது?

வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் DHS-ல் பணி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *