திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவாரூரில் திமுக நாளை (ஜூன் 1) பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து நேற்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டம் முடிவில், “அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இன்றே தொகுதிக்குச் செல்லுங்கள். யாரும் சென்னையில் இருக்க வேண்டாம், நாளை (இன்று மே 31ஆம் தேதி) நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ள தேவையில்லை. நாம் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம்.
ஜூன் 1ஆம் தேதி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.�,