பலூன் திரைப்படத்திற்குப் பின் ஜெய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு 46 நாட்களில் முடிந்திருக்கிறது.
பலூன் படத்திற்குப் பிறகு ஜெய், நடிகர் சத்யாவுடன் கூட்டணி அமைத்தார். சத்யாவுடன் நடிப்பது என்றில்லாமல் அவருடைய சொந்த தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் குறித்தான தகவல்களைக் கசியவிடாமல் படப்பிடிப்பை நடத்திவந்தார். பின்னர் ஜெய்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகா ஒப்பந்தமான தகவல் வெளிவர, படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டார் சத்யா.
ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா வெளியிட்ட இந்தப் படத்தின் டீசரில் அமைந்த காட்சிகளைப் பார்க்கும்போது, காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என சரிவிகிதத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து படப்பிடிப்பின் வேகத்தைக் கூட்டிய இயக்குநர் பிச்சுமணி , 46 நாட்களில் அதனை நிறைவு செய்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சத்யா உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போபோ ஷஷி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் குமார் – ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
�,