yவிழுப்புரத்தில் ஒரே குடும்பத்தினர் தற்கொலை!

Published On:

| By Balaji

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று (அக்டோபர் 18) காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து பார்த்தபோது, சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆரோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சுந்தரமூர்த்தி நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவரிடம் தீபாவளி சீட்டு கட்டி வந்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.

2018ஆம் ஆண்டு தீபாவளியின் போது சென்னையைச் சேர்ந்த அமலா ஜான் என்பவர் தீபாவளி சீட்டுக்காகப் பெற்ற பணத்தைத் திருப்பி கொடுக்க முடியாததால், தனது மகன் ஜோஷ்வா ஜானுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share