பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை முதல் கடுமையான மழை பெய்துவருகிறது. குறிப்பாக, பலோசிஸ்தான் மற்றும் கைபர் மாகாணங்களில் பெய்துவரும் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 24 மணி நேரத்துக்கும்மேல் தொடர்மழை பெய்தது. இதனால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த, 2010ம் ஆண்டுக்குப்பின் பெய்த மிகப்பெரிய மழை இது என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1