mதமிழ் சினிமாவில் பேசப்படுவேன்: சுபிக்ஷா

public

பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை சுபிக்ஷா. அதன்பிறகு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவந்த அவர், தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் மில்டனின் ‘கடுகு’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர், நேத்ரா, சீமத்தண்ணி, கோலிசோடா 2, வேட்டை நாய் எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

படங்களில் தொடர்ச்சியாக நடிப்பது குறித்து தெரிவித்துள்ள சுபிக்ஷா, **“ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘நேத்ரா’ திரைப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்திருக்கிறேன். ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக ‘வேட்டை நாய்’ படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கிறேன். இதில் ரொம்ப அழுத்தமான பாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறேன். ‘சீமத்தண்ணி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை”** என்றார்.

‘கடுகு’ படத்தைத் தொடர்ந்து அவரின் அடுத்த படமான கோலிசோடா 2 படத்தில் நடிக்கும் அவர், **“கடுகு படத்தில் நான் சிறப்பாக நடித்ததாக சொன்ன இயக்குநர் விஜய் மில்டன், கோலிசோடா 2 தொடங்கியதும் இந்தப் படத்தில் எனக்கு ஒரு கல்லூரி பெண் வேடம் இருப்பதாகச் சொன்னார். அதையடுத்து அவரிடம் நான் கதைகூட கேட்கவில்லை. உடனே கால்ஷீட் கொடுத்து விட்டேன். அனைவருமே என்னை கடுகு சுபிக்ஷா என்று சொல்லும் அளவுக்கு அந்தப் படத்தில் நான் நடித்த கேரக்டர் நல்ல ரீச்சானது. எனக்கு ஓர் அடையாளத்தைத் தந்தவர் விஜய் மில்டன். அதேபோல் கோலிசோடா 2-விலும் பேசப்படும் கேரக்டர்தான். இதில் கடுகு படத்தில் நடித்த பரத் சீனிக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் நானும் பேசப்படும் நடிகையாகி விடுவேன்”** எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *