ஒவ்வோர் ஆண்டும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இந்த ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம், ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடும் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்ந்தெடுத்து ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறத் தகுதியான வீரர்களின் பட்டியலை 80 பயிற்சியாளர்கள் மற்றும் 55 பத்திரிகையாளர்கள் கொண்ட குழு பரிந்துரைத்திருந்தது. இந்த பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, கியன்லூகி பபன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் விருதுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று இரவு நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர் 2016-17ஆம் ஆண்டுகளில் நடந்த கால்பந்து போட்டிகளில் 12 கோல்களை அடித்ததற்காக இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,