gநானே சரணடைகிறேன் : டிஜிபி-யிடம் சசிகலா?

public

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக இருக்க, அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனாலும் பல அனுபவங்களைப் பெற்ற சசிகலா மிகுந்த நிதானத்தையே கடைப்பிடித்திருக்கிறார். அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களை திட்டமிட்டு விரைவாக செய்து வருகிறார். காரணம், உச்சநீதிமன்றம் சசிகலா தரப்புக்கு இன்று மாலை வரைதான் நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் கொடுத்திருக்கிறது. நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகாதபட்சத்தில் அவரை விசாரணை அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், சசிகலா தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘நானே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துவிடுகிறேன். கைது செய்தால் அது நன்றாக இருக்காது. நான் சரணடைய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு டிஜிபி ராஜேந்திரன் எந்த பதிலும் கூறவில்லை என்று தெரிகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *