காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி: புத்தகத்துக்கு தடை!

public

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என அச்சிடப்பட்ட சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாபில் உள்ள தனியார் பள்ளிகளில் பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

இது குறித்து பஞ்சாப் பாடநூல் வாரியம் லாகூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளது. சமூக அறிவியல் பாடத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் காட்டப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் பதிப்பகங்கள் மேற்கொண்ட இந்தத் தவறுக்கு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தது.

இதையடுத்து, அனைத்து பள்ளிகளின் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பறிமுதல் செய்ய மாகாணத்தின் அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

பஞ்சாப் பாடநூல் வாரியத்தின் இயக்குநர் அப்துல் காயூம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் , இரண்டாம்,நான்காம் ,ஐந்தாம்,ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் இந்த பிரச்சினை ஏற்படாமல் இருக்க, வாரியத்தின் அனுமதி இல்லாமல் எந்த வகையான புத்தகம், துணைப் பாடநூல்கள் அச்சடிக்கவோ, வெளியிடவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *