மதுரை, அண்ணாநகரில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். இதையடுத்து, வேடச்சந்தூர் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதற்காக வந்த விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்த சிறிதுநேரத்தில், முன் இருக்கையில் இருந்த தேமுதிக தொண்டர் ஒருவர் கிண்டல் செய்வதுபோல அடிக்கடி வணக்கம் தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் ‘நான் சொல்லிகிட்டே இருக்கேன்’ என்று நாக்கை துருத்தியபடி அடிக்கப் பாய்ந்தார். இதையடுத்து விஜயகாந்த், அந்தத் தொண்டரை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதேபோல அவர் பேசத் தொடங்கியதும் கூச்சலிட்ட தொண்டர் ஒருவரை எச்சரித்தார். ‘அவரை அடித்து தூக்கி வீசுங்கள்’ என்றார். பின்னர், ‘அமைதியாக இருந்தால் மட்டுமே பேசுவேன். இல்லையென்றால் புறப்பட்டு சென்றுவிடுவேன்’ என்றார். அதையும் மீறி தொண்டர்கள் சப்தம் எழுப்பியதால் தொண்டர்களை அடிப்பதுபோல பாய்ந்து சென்றார். அப்போது மேடையில் இருந்த வேட்பாளர்கள் அவரைச் சமாதானம் செய்தனர்.விஜாயகாந்த் அடிக்கு எவரும் தப்பியதில்லை, பத்திரிகையாளர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்கள்,என பலரையும் பதம் பார்த்தவர்தான் விஜயகாந்த் ஆனால் இப்போது உஷ்ணம் அதிகமாகி உற்சாகத்தில் கூச்சலிடும் கட்சியினரையே அடிக்கத் துவங்கி விட்டதால் கேப்டன் கூட்டத்திற்கு ஒரு வித அச்சத்துடனேயே தொண்டர்கள் சென்று வருகிறார்கள்.�,
அடிக்க வருகிறார் விஜயகாந்த் குமுறும் தேமுதிக தொண்டர்கள்
+1
+1
+1
+1
+1
+1
+1