ஒரே நாடு ஒரே தேர்தல் : குழுவில் உள்ளவர்கள் யார் யார்?

அரசியல் இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆராய சிறப்புக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இக்குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இக்குழுவின் உறுப்பினர்களை மத்திய அரசு இன்று (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது.

அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15ஆவது நிதி ஆணையத்தின் முன்னாள் சேர்மேன் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் மத்திய விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு, அரசியலமைப்பின் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்யும். உடனடியாக இக்குழு தனது பணியை தொடங்கும் என்றும் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்யும் இந்த குழுவில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளோ அல்லது நீதிபதிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

பொன்முடி வழக்கு: மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

ஆசிய கோப்பை… திணறும் இந்தியா: மழையால் ஆட்டம் பாதிப்பு!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *